'தாய்' ஸ்டைல்: தேங்காய் சாதம்
'தாய்' ஸ்டைல் உணவுகள் மிகவும் சுவையானது மற்றும் எளிமையானது. மேலும் இந்த உணவுகளில் பல மூலிகைகள் பயன்படுத்துவதால், அந்த உணவுகள் மிகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். அந்த வகையில் தாய் ஸ்டைல் தேங்காய் சாதமும் மிகவும் சூப்பராக இருக்கும். மேலும் இதனை மதிய வேளையில் செய்து, குழம்புடன் சாப்பிட்டால் சிறந்த சுவை கிடைக்கும். இப்போது அந்த தாய் டைல் தேங்காய் சாதத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1 1/2
கப் தேங்காய் பால் - 1 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
எலுமிச்சை இலை - 2
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 1/2 கப்
செய்முறை:
முதலில் அரிசியை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, தேங்காய் பால், தண்ணீர், எலுமிச்சை இலை மற்றும் உப்பு சேர்த்து கலந்து, பின் அடுப்பில் வைத்து, தீயை குறைவாக வைத்து நன்கு 5-6 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின்பு அதில் அரிசியைப் போட்டு கிளறி, மூடி வைத்து 15 நிமிடம் தீயை குறைவிலேயே வைத்து, அரிசியை வேக வைக்க வேண்டும். 15 நிமிடம் ஆனப் பின்னர், மூடியைத் திறந்து, துருவி வைத்துள்ள தேங்காயை போட்டு, பின் அதில் உள்ள எலுமிச்சை இலையை எடுத்துவிட்டு அடுப்பை அணைக்க வேண்டும். இறுதியில் அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து பரிமாறினால், சூப்பரான தாய் ஸ்டைல் தேங்காய் சாதம் ரெடி!!! இதனை மதிய வேளையில் விருப்பமான குழம்பு ஊற்றி சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
No comments:
Post a Comment